பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!
பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்! சட்டமன்றம் ஆச்சரியப்படுத்தும் பல அரசுகளை சந்தித்திருக்கிறது. வியக்க வைக்கும் பல விந்தையாளர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசு ஆச்சரியத்திற்குரியதும் அல்ல. ஆளுகிற நானும் வியப்புக்குரியவனும் அல்ல. அதிகார போதையோடு ஆங்காங்கே தென்படுபவர்களில் ஒருவன் தான் நான். தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யை உதிர்த்தேன். நல்லாட்சி தந்தவர்களை தீய சக்தி என்று கூறி நையப் புடைத்தேன். வேலையைக் காட்டியிருக்கிறேன் இவ்வாறெல்லாம். இவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லை. சர்கார் சத்தியமாக இல்லை! தேர்தல் நாட்களில் குட்டி கதைகளை அவிழ்த்து விட்டேன். காரணம் அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும் என்பதனால் அல்ல. அவைகளைத் தான் ரீல்ஸ்க்குள் அடக்க முடியும் என்பதற்காக! முந்தைய அரசு மீது அவதூறை அள்ளித் தெளித்தேன். எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக அல்ல , அவர்கள் மண்ணை கவ்விட வேண்டும் என்பதற்காக! உனக்கு ஏன் இவ்வளவ...