Posts

Showing posts from August, 2026

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!     சட்டமன்றம் ஆச்சரியப்படுத்தும் பல அரசுகளை சந்தித்திருக்கிறது. வியக்க வைக்கும் பல விந்தையாளர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசு ஆச்சரியத்திற்குரியதும்   அல்ல. ஆளுகிற நானும் வியப்புக்குரியவனும் அல்ல.   அதிகார போதையோடு ஆங்காங்கே தென்படுபவர்களில் ஒருவன் தான் நான். தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யை உதிர்த்தேன். நல்லாட்சி தந்தவர்களை தீய சக்தி என்று கூறி நையப் புடைத்தேன்.     வேலையைக் காட்டியிருக்கிறேன் இவ்வாறெல்லாம். இவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லை. சர்கார்   சத்தியமாக இல்லை!     தேர்தல் நாட்களில் குட்டி கதைகளை அவிழ்த்து விட்டேன். காரணம் அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும் என்பதனால் அல்ல. அவைகளைத் தான் ரீல்ஸ்க்குள் அடக்க முடியும் என்பதற்காக!     முந்தைய அரசு மீது அவதூறை அள்ளித் தெளித்தேன். எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக அல்ல , அவர்கள் மண்ணை கவ்விட வேண்டும் என்பதற்காக!   உனக்கு ஏன் இவ்வளவ...

எம். எல். ஏ. என்னும் ஏழைகள்!

 எம்எல்ஏ என்னும் ஏழைகள்! ஐயோ பாவக் கால்கள் கொண்டவர்கள், தொகுதி வலம் வர வழியற்ற வரியவர்கள், பல்லாயிரம் அடி நடந்து  பாதம் நொந்தவர்கள், நித்திரை வெறுத்து மக்களை நெருங்கிடும் நேசர்கள், கோரிக்கைகள் ஈடேற்ற குடிசைகளை அண்டிடும் அற்புதர்கள், அடிதடி தடுப்பதற்கு அன்பை ஏந்திச் செல்லும் அமைதியின் தூதுவர்கள், ஆற்றுப்படுகை பாதுகாக்க காற்று போல் சீறிப்பாயும்  சீமான்கள், திட்டங்களை நிறைவேற்ற வட்டமிட்டு சுற்றிச் சுழலும்  பூலோகத்துச் சூரர்கள், சட்டத்தை சமன்படுத்த சாரை சாரையாய் அணிவகுக்கும் சாரதிகள், இல்லாதோரை எட்டிப்பிடிக்க நில்லாது பாடுபடும் ஏழைப் பங்காளர்கள், சுயநலத்தை கரைத்து தொலைத்து  பொதுநலத்திற்காய் பயணப்படும் பங்காளிகள், வாக்குப்பெற்று இருந்தபோதிலும் வாடகை கட்டிட வக்கற்றிருக்கும் வானவர்கள், பாகுபாட்டை ஒழிப்பதற்கு மேடு பள்ளங்கள் ஏறி இறங்கும் மாமணிகள், தன்னிடம் இருப்பதை கொடுப்பதற்கு வேகமாய் விரைந்திடும் வில் அம்புகள், பட்டி தொட்டியில் வசித்து நகரம் வர பேருந்துக்காய் கால் கடுக்கும்  கனவான்கள், காணி நிலத்தையும் கொண்டிடாத சேவை ஞானி மனம் பெற்று இருக்கும் பெரும்புள்ளிகள், பஞ்...