Posts

Showing posts from November, 2025

இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!

 இனி அப்படி யாரும் பிறக்க கூடாது! இலச்சினையும் முத்திரையும் அதற்காகவே முண்டியடித்து காத்து கிடக்கின்றன! ஆயிரம் அதிகார காகிதங்களின் மேல் அன்றாடம் மோதினாலும், ஒரு தாளின் மேல் தடம் பதிக்க தான்தோன்றி தனமாய் தவம் இருக்கின்றன! அந்த தாளின் எழுத்துக்கள் வெங்கோல் கழுத்துகளுக்கு இறுதி இறுக்கத்தை, கொடுத்து குருதியின் கொதிப்பினை வதக்கிட  துடித்தபடி கண்ணிவைத்து காத்து இருக்கின்றன! அது ஒரு கனவு திட்டம் என்பதால் அல்ல, ஒரு கூட்டத்தின் கனவை கலைக்க போகும் தீய திர்மானம் ஆதலால்! இது ஒன்றும் யோசனையில் எடுத்த முடிவு அல்ல,, கண்ணின் நுனியில் அதன் வெளிச்சத்து கூச்சத்தில் கூடி எடுக்கப் பட்டது, வெளிச்சமில்லா விழிகளை தயவு தாச்சமில்லா விதஹ்த்தில், அரசானை பதத்தில் மோச்சம் தந்திடும் பாய்ச்சல் தானிது! ஐயமில்லை அதிகார வெளிச்சங்களின் ஆசியில் அப்படியே செய்ய பேசிய சூழ்ச்சி முடிச்சு  வகையறாவை சேர்ந்தது! அவர்கள் இருப்பதால் பிறந்திடும் வெறுப்பினை விரட்டிட, போராடிடும் அவர்களின் குணங்களை கசக்கி சுருட்டிட, எல்லாம் அடக்கியும் அடங்கிட மருத்திடும் எஞ்சியதை தடுத்திட, உரிமை பேசி சட்டம் தூக்கிடும் சில கைகளை உடைத்திட, ச...

இருபத்தி நான்கு என்னும் மத ஆணை!

 இருபத்துநான்கு என்னும் மத ஆணை! மதம் பிடிப்பதன் உருவம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது இல்லை.  விரல்கள் இடுக்கில் வைக்கும் பேப்பர் அளவிற்கு இருக்கலாம்.  அதில் அச்சிடப்படும் வார்த்தைகளும் வரிகளும், சமந்த ப்பட்டோருக்கான சம்மதத்தை  மிதித்து அழிக்கும், உரிமைகளை வதம் செய்து அதிகார ஆணவத்தில் கூத்தடிப்பதாகவும், இருக்கவும் செய்யலாம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் செய்யலாம்! அரசுகளின் ஆணையில் வார்த்தைகள் பதமாய் அச்சிடப்படும். அந்த அச்சுக்குள் கலந்திருக்கும் நச்சுக்களை தரம் பிரித்தால்,  அருவருப்போ அல்லது உயிர் துறப்போ இரண்டில் ஒன்று உங்கள் இதயம் தொடும்! இனி இதயங்களை பத்திரப்படுத்திக் கொள்வது கடினம்.  காரணம் அச்சுகளைக் கொண்டல்ல நச்சுகளைக் கொண்டுதான் ஆணைகள், வெளிவருவது வழக்கமானது அது காவு வாங்கும் பழக்கத்தை கண் மூடாமல் பேணுது! வேலா வேலைக்கு ஆணை ரதம் எனும் அறிக்கை வரும், பலரின் வேலை எடுக்கும் வேலையை செய்தபடியும், அதிகாரத்தின் வக்கிரமாய் நிலை பெறும், அடச்சி இதுவன்றோ புழுத்துப் போன ஜனநாயகத்தின் நிலவரம்!  பார்வை அற்றோருக்கு கொடுத்த ஒதுக்கீட்டை பறிக்கும் பம்மாத்தும் வளம...